Wednesday 21 November 2012

நான்கு கரங்களுடன் ராமர்!


பொன்பதர் கூடம் ராமர் கோயில்.  செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.   உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார்.  தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார்.  இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள்.  நேரம் வந்தபோது ராமர் தான்  என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி  அளித்து  தானே நாராயணன் என்பதை உணர்த்தினார்.  அது  போல்  கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய  போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.

சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!

No comments:

Post a Comment