Saturday 24 November 2012

சிக்கலாருக்கே வியர்க்கிறதாம்!


சிக்கல்! முருகர்  தன் தாயிடம் வேல் வாங்கின இடம்.  இங்கு உற்சவரும்  மூலவரும்  ஒருவரே.  மற்ற கோயில்களில் உற்சவர்  சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும்.  உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள்.  இங்கு மூலவரே உலாவருகிறார்.  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும்.  பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.

சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!

Wednesday 21 November 2012

நான்கு கரங்களுடன் ராமர்!


பொன்பதர் கூடம் ராமர் கோயில்.  செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.   உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார்.  தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார்.  இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள்.  நேரம் வந்தபோது ராமர் தான்  என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி  அளித்து  தானே நாராயணன் என்பதை உணர்த்தினார்.  அது  போல்  கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய  போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.

சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!

Tuesday 13 November 2012

பகவான் கிருஷ்ணரின் சமாதி!


பூரி ஜகன்னாதர் ஆலயம்!  ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம்.  ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு.  அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி.  ஆம்!  அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர்.  கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி".  ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது.  அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும்.  நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார்.  அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார்கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார்.  ஆம்! அவர் போகர் சித்தர்.  

போய் தரிசனம் செய்யுங்கள்! அப்போது புரியும்!

Thursday 8 November 2012

வில்வ பூசை உணர்த்தும் தத்துவம்!


"விஸ்வநாதர் கோயில்"காசி!

இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள்.  இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.  அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.

போய் பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!