Friday 24 August 2012

நெய் உறைந்து மறைந்த லிங்கம்!


எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.  உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.  எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை.  இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.  வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம்.  உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்! 

No comments:

Post a Comment